நெல்லை பாபா ...ரஜினிபேன்ஸ்.காம்
அன்பு ! அடக்கம்! அமைதி! அம்மாவிடம் கிடைப்பது! ஆசிரியர் சொல்லி தந்தது! ரஜினியிடம் கற்றது !
Tuesday, January 03, 2006
Monday, January 02, 2006
Tuesday, June 28, 2005
Thursday, June 09, 2005
உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தென்காசி ரஜினிரசிகர்களின் சந்திரமுகி - 50 வது நாள் கொண்டாட்டம் !!!
தென்காசி நகர மன்ற தலைவர் கோமு தலைமையில் சந்திரமுகி திரையிட்டிருக்கும் பாக்கியலட்சுமி தியேட்டரில் நடைபெற்றது.இவ்விழாவில் தியேட்டர் உரிமையாளர் திரு,ஜெக நாதராஜா ,தியேட்டர் மேலாளர் மற்றும் தியேட்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் திரைபடத்தை காணவந்திருக்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கும் நகர மன்ற தலைவர் கோமு இனிப்பு வழங்கி மகிழ்விததார்.தியேட்டரின் முகப்பில் ரஜினியி 100 அடி கட்-அவுட் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.இந்த விழவை ஒட்டி நகர மன்றம் சார்பில் பல நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நன்றி - நெல்லை தினகரன்.
இந்திய திரைப்பட வரலாற்றிலேயே 1933 ஆண்டு முதல் 2005 வரை 250 தியேட்டரில் - 50 நாளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் ஒரே படம் சந்திரமுகிக்கு கிடததனால் தான் உலக சூப்பர் ஸ்டார்
என்று ரசிகர்களால் அழக்கப்படுகிறார் தலைவர் ரஜினிகாந்த்.
நேசத்துடன்
நெல்லை பாபா.www.rajinifans.com
Sunday, December 12, 2004
Friday, November 19, 2004
நெல்லை ரஜினி ரசிகர்களின் திருமண வாழ்த்துக்கள் !
மனித நேயம் கொண்ட புனித தலைவர் ரஜினிகாந்தை போல் அவரது ரசிகர்களும் மனிதனேயதுடன் தான் இருக்கிறார்கள்.இதற்கு உதாரணமாக திரு. ரஜினிகாந்த் அவர்களின் தவபுதல்வி செல்வி ஜஸ்வர்யாக்கும் ,திரு.கஸ்தூரிராஜா தவபுதல்வன் தனுஸ் கும் 18.11.2004 வியாழன் அன்று நடைபெற்ற திருமணமும் ,திருமண தம்பதிகளும் சிறப்புற ,திருமணம் வாழ்வில் வெற்றிபெற வேண்டி நெல்லை மாவட்ட ரஜினி நற்பனி மன்ற்ம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி திரு,தாயப்பன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகி எம்.கணேசன் முன்னிலை வகித்தார். ஸிபா மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.இசக்கிமுத்து வற்வேற்று பேசினார்.உடன் ஸிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகமது ஸாபின் மற்றும் தள்வாய் ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டி பேசினர்.
முன்னதாக ரஜினி ரசிகர் மன்றதினர் கே.பகவதீஸ்வரன்,எஸ்.குமார்,எஸ்.சாந்தகுமார்,பி,ராஜா,
ஆர்.முத்துகிருட்டிணன்,எஸ்.கோவிந்தா,ஏ.ராஜ்குமார் மற்றும் என்.ராஜேஸ் ஆகியோர் ரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நல்ல எண்ணம் கொண்ட ரஜினிரசிகர்களை அனைவரும் பாராட்டுவோம்.
நன்றி
நேசத்துடன்.
நெல்லைபாபா.
M.P.குறிச்சி.
தென்காசி.